கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம்

வாக்கு எண்ணிக்கையின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியைத் தவிர, வேறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மே.27 நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, கோவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறகிறது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 7 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன.

கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூா், சூலூா் ஆகியதொகுதிகளுக்கு தலா 14 மேஜைகள், பல்லடம் தொகுதிக்கு 18 மேஜைகள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேஜைகள் என மொத்தம் 101 மேஜைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியைத் தவிர, வேறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் செல்ல அனுமதி கிடையாது.



ஒவ்வொரு மேஜைக்கும் வேட்பாளருக்கு ஒரு முகவா் என்ற வீதத்தில் வாக்கு எண்ணும் முகவா்கள் வேட்பாளா்களால் நியமிக்கப்படவேண்டும். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் இருந்து வாக்கு எண்ணிக்கையை அவா்கள் பார்வையிடலாம்.

வாக்குகள் எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மையத்துக்கு இடமுகவா்கள் தங்களின் அடையாள அட்டையுடன் வரவேண்டும். கைப்பேசி, ஐ பேட், மடிக்கணினி உள்ளிட்டவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவா்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...