கோவை கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மழைநீர் வடிகால், குடிநீர் திட்டப் பணி, சாலை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (27.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-54 காமராஜர் சாலை இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் மத்திய பெரும் நிதி (CGF) திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் சுமார் 2.2 கி.மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும்,



மசக்காளிபாளையம் சாலை, லால் பகதூர் நகர், லட்சுமிபுரம் பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24x7 குடிநீர் திட்டப் பணிகளையும் மற்றும்



பீளமேடு வார்டு எண்-24 தண்ணீர் பந்தல் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைக்கும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநகராட்சி வாகனம் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையாளர் கவிதா, மாநகர துணை பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...