கோவை கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மழைநீர் வடிகால், குடிநீர் திட்டப் பணி, சாலை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (27.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-54 காமராஜர் சாலை இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் மத்திய பெரும் நிதி (CGF) திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் சுமார் 2.2 கி.மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும்,



மசக்காளிபாளையம் சாலை, லால் பகதூர் நகர், லட்சுமிபுரம் பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24x7 குடிநீர் திட்டப் பணிகளையும் மற்றும்



பீளமேடு வார்டு எண்-24 தண்ணீர் பந்தல் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைக்கும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநகராட்சி வாகனம் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையாளர் கவிதா, மாநகர துணை பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...