கோவை கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மழைநீர் வடிகால், குடிநீர் திட்டப் பணி, சாலை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (27.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-54 காமராஜர் சாலை இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் மத்திய பெரும் நிதி (CGF) திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் சுமார் 2.2 கி.மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும்,



மசக்காளிபாளையம் சாலை, லால் பகதூர் நகர், லட்சுமிபுரம் பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24x7 குடிநீர் திட்டப் பணிகளையும் மற்றும்



பீளமேடு வார்டு எண்-24 தண்ணீர் பந்தல் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைக்கும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநகராட்சி வாகனம் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையாளர் கவிதா, மாநகர துணை பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...