கோவையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி - மாநகராட்சி ஆணையாளர் தொடக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி ஹவுசிங்யூனிட் அருகில் பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (27.05.2024) துவக்கி வைத்தார்.



அதனைத்தொடர்ந்து அவர் பேசியாதவது, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 10123 வகைகளான மரங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழ்வின்போது, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...