உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் இலவச தடகள பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால தடகள இலவச பயிற்சி முகாமில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை உடற்கல்வித்துறை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது


திருப்பூர்: திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலவச தடகள பயிற்சி முகாம் மே1ம் தேதி முதல் நடைபெற்றது.

இந்த தடகள பயிற்சி முகாமின் இறுதி நாளான இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர் எஸ்.கே.கல்யாணி மற்றும் திருப்பூர் தடகள சங்க தலைவர் ஆர்.பி.ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் முத்துக்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தடகள சங்க துணை செயலாளர் மற்றும் ஐ வின் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் அழகேசன், திருப்பூர் தடகள சங்க தொழில்நுட்ப குழு உறுப்பினர் சிவசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். லயன்ஸ் கிளப் சேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்லூரி முன்னாள் மாணவர் செந்தில், அவதார் கிரிக்கெட் கிளப் பர்வீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். உடுமலைப்பேட்டையில் தடகள ஆர்வலர்கள், நடைபயிற்சியாளர் சங்க உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், கல்லூரி முன்னாள் மாணவர்கள், கல்லூரி தடகள வீரர்கள் கலந்து கொண்டனர்.



130க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.



மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கோடைகால தடகள இலவச பயிற்சி முகாம் திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை உடற்கல்வித்துறை சார்பாக நடைபெற்றது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...