உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் இலவச தடகள பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால தடகள இலவச பயிற்சி முகாமில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை உடற்கல்வித்துறை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது


திருப்பூர்: திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலவச தடகள பயிற்சி முகாம் மே1ம் தேதி முதல் நடைபெற்றது.

இந்த தடகள பயிற்சி முகாமின் இறுதி நாளான இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர் எஸ்.கே.கல்யாணி மற்றும் திருப்பூர் தடகள சங்க தலைவர் ஆர்.பி.ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் முத்துக்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தடகள சங்க துணை செயலாளர் மற்றும் ஐ வின் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் அழகேசன், திருப்பூர் தடகள சங்க தொழில்நுட்ப குழு உறுப்பினர் சிவசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். லயன்ஸ் கிளப் சேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்லூரி முன்னாள் மாணவர் செந்தில், அவதார் கிரிக்கெட் கிளப் பர்வீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். உடுமலைப்பேட்டையில் தடகள ஆர்வலர்கள், நடைபயிற்சியாளர் சங்க உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், கல்லூரி முன்னாள் மாணவர்கள், கல்லூரி தடகள வீரர்கள் கலந்து கொண்டனர்.



130க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.



மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கோடைகால தடகள இலவச பயிற்சி முகாம் திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை உடற்கல்வித்துறை சார்பாக நடைபெற்றது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...