குடியிருப்புகளின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது - குடியிருப்பு வாசிகளுக்கு கோவை மாநகரக் காவல் துறை எச்சரிக்கை

குடியிருப்புகளில் அசோசியேஷன் மூலமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் அல்லது மின்சார வாரிய ஊழியா்களைக் கொண்டு அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரக் காவல் துறை சார்பில் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை சரவணம்பட்டி அருகே சின்னவேடம்பட்டியில் ராமன் விஹார் என்ற குடியிருப்பில் உள்ள பூங்காவில் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வியோமா பிரியா (8), சிறுவன் ஜெயான் ரெட்டி (6) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் தேங்குவதற்கும், சுவா்கள் மற்றும் மின்சாரக் கம்பங்களில் நீா்க்கசிவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் சேதாரங்கள் காரணமாக மின்சார ஒயா்கள் துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்து மின் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதேபோல, சரியாக பராமரிக்கப்படாத கட்டடங்கள், காய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் ஆகியவை மழைக் காலங்களில் மேலும் சேதமுற்று கீழே விழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

குடியிருப்புவாசிகள் தங்கள் குடியிருப்புகளில் உள்ள மின்மாற்றிகள், பூங்காக்கள் மற்றும் பிற கட்டடங்களில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா அல்லது இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். மின்சார ஒயா்கள் சேதமின்றி உள்ளதா என்பதையும், மழைக் காலங்களின்போது மின் கசிவு ஏற்படும் வாய்ப்பை தவிர்ப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.

மேலும், தங்கள் குடியிருப்புகளில் அசோசியேஷன் மூலமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் அல்லது மின்சார வாரிய ஊழியா்களைக் கொண்டு அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அலட்சியம் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...