ராஜஸ்தான் மாணவர் செயற்பாட்டாளர் படுகொலைக்கு நீதி கேட்டு கோவையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

னைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் ககன்தீப் சிங் படுகொலைக்கு நீதிக்கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் வே.வசந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் ககன்தீப் சிங் கடந்த 15.05.2024ஆம் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவர் பெருமன்ற தோழர்களும், ஊர் மக்களும் ஆரம்பத்திலிருந்தே இது கொலை என்று கூறிவந்த நிலையில் காவல்துறையினர் விபத்து என்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தோழர் ககன்தீப் சிங்கை திட்டமிட்டு தலையில் தாக்கி படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ககன்தீப் சிங் உடலில் விபத்திற்கான வேறு எந்த காயங்களும் இல்லை. தோழர் ககன்தீப் சீங் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழர் ககன்தீப் சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதிகளில் உள்ள மாணவர்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு மாணவர் செயற்பாட்டாளர். மாணவர் போராட்டங்களில் முன்னணியில் இருந்தவர்.



ஞானஜோதி கல்லூரியை அரசு கையகப்படுத்தியதில் இவரது பங்களிப்பு மகத்தானது. ககன்தீப் சிங் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் வே.வசந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் பெருமன்ற முன்னாள் மாநிலத் தலைவர் குணசேகர், மாநில துணைத் தலைவர் சினேகா, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் என்.ஜீவானந்தம், எம்.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...