ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி மலர் - வால்பாறையில் மக்கள் பார்த்து வியப்பு

வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் பாபு என்பவரது வீட்டில் நேற்றிரவு நிஷா காந்தி பூ பூத்தது. நறுமணத்துடன் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துக்குலுங்கின. இந்த அழகிய காட்சியை அருகில் உள்ளவர்களும் வந்து பார்த்து ரசித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் குடியிருந்து வரும் பாபு என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷாகாந்தி பூ இரவில் பூத்துக் குலுங்கியது. பாபு என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நிஷா காந்தி செடியை வளர்த்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் விஷாகாந்தி பூ பூக்கும் என்பதை கேள்விப்பட்டு தங்கள் வீட்டில் நிஷா காந்தி பூ பூக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.



இந்த நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் அழகான நறுமணத்துடன் பூ பூத்தது. முதலில் ஒரு சில பூக்கள் மெல்ல மெல்ல பூக்க துவங்கியது. பின் சுமார் 30ற்கு மேற்பட்ட பூக்கள் செடியில் பூத்துக் குலுங்கியது. இந்த பூ மிகவும் அழகாக தூய வெள்ளை நிறத்தில் உள்ளது.

நிஷாகந்திப் பூ இரவில் மலர்ந்து அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே வாடிவிடும் தன்மை உடையது. இந்த வகை பூக்கள் இமயமலை பகுதிகளில் அதிகமாக காணப்படும்.

மேலும் இந்த பூ இலைகள் மருத்துவ குணம் உடையது. இந்த இந்த நிஷா காந்தி பூ வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் பூத்து குலுங்கியது வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ளவர்களும் இந்தப் பூக்களை பார்த்து ரசித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...