பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக கோவை வரும் ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும் என்று தென்னகரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்-கோயம்புத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள வஞ்சிபாளையம் ரயில்வே யார்டில் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி ஜங்சன்- பாலக்காடு டவுன் ரயில் (24.05.2024 & 26.05.2024) ஈரோடு-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஈங்கூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.இந்த ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து ஈங்கூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்.

பாலக்காடு நகருக்கு இயக்கப்படாது. ரயில் எண்.18190 எர்ணாகுளம் ஜங்சன் - டாடாநகர் ஜங்சன் 28 & 30ம் தேதிகளில் வசதியான ஏதேனு ஒரு இடத்தில் 1 மணிநேரம் நிறுத்தி செல்லப்படும். ரயில் எண்.13352 ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் 28 & 30 தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...