உடுமலை அருகே சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

சிறு சிறு ஆறுகளை வழிமறித்து தடுப்பணைகள் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் தடுப்பணையால் பாதிப்பு இல்லை என்று கூறுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தை ஆற்றின் குறுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், சிலந்தை ஆற்றின் குறுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருவதை கண்டிக்கின்றோம். இதை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். ஏனென்றால் அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், 120 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு சிறு ஆறுகளை வழிமறித்து தடுப்பணைகள் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் ஒரு டி.எம்.சி தண்ணீர் தான் எடுக்கப்படுகிறது. இதனால் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். பழைய மற்றும் புதிய ஆயகட்டுப்பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் அறிக்கை அளித்து உள்ளனர். அதிகாரிகளின் பதிலானது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற நிகழ்வாகும். தடுப்பணை கட்டும் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கேரள மாநில சோதனை சாவடிகளில் தடுக்கின்றனர்.



சட்டவிரோதமாக அணை கட்டுவதால் தான் ஆய்வு செய்ய மறுக்கின்றனர். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெறாததும் தெரியவருகிறது. தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும் அங்குள்ள மரங்களை காப்பாற்றவும் தடுப்பணை கட்டி வருகின்றனர். இதனை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

மேலும் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அணை கட்டுவதை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படுவதுடன் தமிழகத்தில் இருந்து உடுமலை வழியாக கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள், இறைச்சி, போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...