கோவையில் கல்லூரி பேராசிரியை தற்கொலை - காரணம் குறித்து பேரூர் போலீசார் விசாரணை

பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் கல்லூரி பேராசிரியை செலின் ரேச்சல் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து பேரூர் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் வசிப்பவர் திருச்செந்தூரைச் சார்ந்த விஜய் கிங்ஸ்லி(30). இவரது மனைவி செலின் ரேச்சல் (29). இவர் அரசாங்க கலை அறிவியல் கல்லூரியில் சி.எல்.பி. பிரிவில் பேராசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. தம்பதிகள் குழந்தை மற்றும் விஜயின் தாயார் உட்பட நான்கு பேர் வாடகை குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையிலே, விஜய்க்கு நேற்று காலை அலுவல் வேலையாக வெளியே சென்று விட்டார். பிற்பகல் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

பலமுறை தட்டியும் திறக்கவில்லை. குழந்தையின் அழுகுரல் சத்தம் மட்டும் கேட்டிருக்கின்றது. இதனால், காவல் நிலையம் வந்து தனது மனைவி வீட்டை பூட்டி விட்டு உள்ளே இருப்பதாக காவல் நிலையத்தில் வந்து புகார் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலர் கண்ணதாசன் சென்று கதவைத்திறந்து பொழுது, செலின் ரேச்சல் அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரேதத்தை கைப்பற்றி பேரூர் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...