மத்திய தீயணைப்பு துறையினரும், பாம்பு பிடி வீரர் அமீரும் இணைந்து காவலர் வாகனத்தில் ஏறிய மூன்றடி நீளம் உள்ள பச்சை பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பாக காவலர் வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மே.21 மரக்கிளையில் இருந்து ஒரு மூன்றடி நீளம் உள்ள பச்சைப் பாம்பு அந்த வாகனத்தில் ஏறியது. இதனை அறிந்த ஓட்டுனர் உடனடியாக மத்திய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மத்திய தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் வீரரான அமீன் அவர்களும் இணைந்து அந்த மூன்று அடி நீளம் உள்ள பச்சை பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினரிடம் கொடுத்தனர். அவர்கள் அந்த பாம்பை மதுக்கரை வன பகுதியில் விடுவதாக தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து மத்திய தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் வீரரான அமீன் அவர்களும் இணைந்து அந்த மூன்று அடி நீளம் உள்ள பச்சை பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினரிடம் கொடுத்தனர். அவர்கள் அந்த பாம்பை மதுக்கரை வன பகுதியில் விடுவதாக தெரிவித்து உள்ளனர்.