கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், கோவை மாநகராட்சி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு பகுதியில் உள்ள ஏழாவது குறுக்கு தெருவில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சார்பாக இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (மே.21) நடைபெற்றது.



இதில், பீளமேடு பகுதிக்கு சிமெண்ட் காங்கிரட், மழை நீர் வடிகால், மின்விளக்கு அமைக்கப்படும் என ஒப்பந்ததாரர் மூலமாக எழுத்து மூலம் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. எனவே, இதனை கண்டித்து பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், கோவை மாநகராட்சி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கோவை மாநகராட்சி மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...