உடுமலை அருகே தமிழக எல்லையில் தடுப்பணை கட்டும் பணியில் கேரள அரசு தீவிரம்

கேரள மாநிலம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்னும் இடத்தில் சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை கேரளா அரசு தொடங்கி உள்ளது. இதனால், குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று தமிழக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.



அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கேரளா அரசு அமராவதி அணையின் பிரதான நீர் வரத்தான சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை துவக்கி உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா என்னும் இடத்தில் சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை கேரளா அரசு தொடங்கி உள்ளது. அமராவதி அணைக்கு தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்கு எடுப்பதாக கூறி கேரளா அரசு அங்கு ஒரு தடுப்பணையை கட்டி வருகிறது.

இது குறித்து விசாரிக்கையில் அந்த பகுதியில் அமைய உள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் கம்பெனிக்காக அந்த தடுப்பணை கட்டப்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தடுப்பணை கட்டப்படுவதால் அமராவதி அணைக்கு வரும் நீர் வரத்து நின்று விடக்கூடும். இதனால் அணையை ஆதாரமாகக் கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கி குடிநீர் பஞ்சமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு, கேரளா அரசுடன் போர்கால அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதுடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணியையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமராவதி பாசன விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...