கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகளை காண குவிந்த மக்கள்

கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். பல்வேறு பறவை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மே.19 அன்று குவிந்துள்ளனர்.


கோவை: வருடத்தில் கோடை காலம் முடிந்து கோடை மழை துவங்கும் நேரத்தில் கால மாற்றம் காரணமாக பல்வேறு பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும். குறிப்பாக மிதமான வெப்பநிலை இருக்க கூடிய இடங்களுக்கு அதிகமான பறவைகள் இடம் பெயரும். அதன்படி தற்போது கோவை, நீலகிரி பகுதிகளில் மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பெலிக்கான் பறவைகள் அதிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அதன்படி கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன. இதனை காண்பதற்கு பல்வேறு பறவை ஆர்வலர்கள் இன்று மே.19 குவிந்துள்ளனர். பலரும் கேமராக்களில் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.



மேலும் புகைப்பட கலைஞர்களும் அதிநவீன கேமராக்களை கொண்டு அப்பறவைகளை புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

மேலும் அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெலிக்கான் பறவைகளை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் இங்கு உள்நாட்டு பறவைகளான நாரை, கொக்கு உள்ளிட்டவைகளும் வந்துள்ளதால் பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...