உடுமலையில் புத்த பூர்ணிமா விழாவில் பால் கஞ்சி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி

உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற புத்த பூர்ணிமா விழாவில், பால் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. பால் கஞ்சி 500 மக்களுக்கு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் ஊராட்சியில் புத்த தம்மம் அறிவு திருக்கோவிலில் கௌதம புத்தர் ஞானம் பெற்ற நாள், பிறந்தநாள் மற்றும் இறந்த நாள் 3 நாட்களும் ஒரு சேர வரும் புத்த பூர்ணிமா விழா வருகின்ற மே -23 அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது



இதனை சிறப்பிக்கும் வகையில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு இனிப்பு கலந்த பால் கஞ்சி வழங்கும் விழாவிற்கு தமிழ் புலிகள் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். புத்த தம்மம் அறிவு திருக்கோவில் தலைவர் விஜயகாந்த் , சிவகாமி வேலன் முன்னிலை வகித்தார். சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பால் கஞ்சி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் தலைமை குரு, கௌதம், காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...