கோவையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் திணறல்

கோவையில் நேற்று கனமழையால் உக்கடம், மற்றும் சுங்கம் பைபாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறினர்.


கோவை: கோவையில் நேற்று (மே.18) 2 மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்த கனமழையால் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலைகளில் நீர் தேங்கியது. இந்த நிலையில் மழை ஓய்ந்த சற்று நேரத்தில் கோவை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.



குறிப்பாக உக்கடம், மற்றும் உக்கடம் முதல் பாலக்காடு செல்லும் சாலை, சுங்கம் பைபாஸ் செல்லும் சாலை போன்ற இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. மேலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.



இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என பலரும் பேருந்திற்கு காத்திருக்கும் நிலையை எதிர்கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...