பொள்ளாச்சி-உடுமலை சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள ஜெய் கணபதி நகர், கிருஷ்ணவேணி ராஜநகர் மற்றும் வாசவி நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது.



நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பெய்துவிட்டது. கிருஷ்ணவேணி ராஜநகர், ஜெய் கணபதி நகர், வாசவி நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.



இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.



மேலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



உடுமலை சாலை சந்திராபுரம் பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கே உள்ளாகினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து வருகிறது.



பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...