குன்னத்தூர் குளம் தூர்வரும் பணி - கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுவேதா சுமன் தொடக்கம்

135 ஏக்கர் பரப்பளவு கொண்ட குன்னத்தூர் குளம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அனுமதியுடன் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் தூர்வாரப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், காட்டம்பட்டி மற்றும் குன்னத்தூர் ஊரட்சியில் அமைந்துள்ளது குன்னத்தூர் குளம். இந்த குளமானது மக்களால் காட்டம்பட்டி குளம், கடத்தூர் குளம் என்றழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் கடந்த ஐந்து வருடங்களாக களப்பணி செய்து, நீர் வழித்தடங்களை தூர்வாரி நீர் கொண்டு வந்தது, குளத்தை ஒட்டி 3500 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு உருவாக்கி பராமரித்து வருவது போன்ற பணிகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் செய்து வருகின்றனர்.



சுமார் 135 ஏக்கர் பரப்பளவு கொண்டகுன்னத்தூர் குளமானது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அனுமதியுடன் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் தற்போதுதூர்வாரப்படுகிறது.



இதன் மூலம் குளத்தினுடைய நீர் சேமிப்பு திறன் அதிகப்படுத்தப்படும். வரக்கூடிய பருவமழை காலத்தில் பெறக்கூடிய நீரினை அதிக அளவில் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர்தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குளக்கரை பலப்படும்.இந்த நிலையில் இன்று (18.05.2024) காலை குன்னத்தூர் குளத்தை தூர்வாரும் பணியை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுவேதா சுமன் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஸ்டல்லரிஸ் நிறுவனங்கள்சார்பில் மேலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கோகுல், ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், கெளசிகா நீர்க்கரங்கள் செல்வராஜ்மற்றும் விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...