குன்னத்தூர் குளம் தூர்வரும் பணி - கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுவேதா சுமன் தொடக்கம்

135 ஏக்கர் பரப்பளவு கொண்ட குன்னத்தூர் குளம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அனுமதியுடன் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் தூர்வாரப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், காட்டம்பட்டி மற்றும் குன்னத்தூர் ஊரட்சியில் அமைந்துள்ளது குன்னத்தூர் குளம். இந்த குளமானது மக்களால் காட்டம்பட்டி குளம், கடத்தூர் குளம் என்றழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் கடந்த ஐந்து வருடங்களாக களப்பணி செய்து, நீர் வழித்தடங்களை தூர்வாரி நீர் கொண்டு வந்தது, குளத்தை ஒட்டி 3500 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு உருவாக்கி பராமரித்து வருவது போன்ற பணிகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் செய்து வருகின்றனர்.



சுமார் 135 ஏக்கர் பரப்பளவு கொண்டகுன்னத்தூர் குளமானது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அனுமதியுடன் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் தற்போதுதூர்வாரப்படுகிறது.



இதன் மூலம் குளத்தினுடைய நீர் சேமிப்பு திறன் அதிகப்படுத்தப்படும். வரக்கூடிய பருவமழை காலத்தில் பெறக்கூடிய நீரினை அதிக அளவில் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர்தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குளக்கரை பலப்படும்.இந்த நிலையில் இன்று (18.05.2024) காலை குன்னத்தூர் குளத்தை தூர்வாரும் பணியை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுவேதா சுமன் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஸ்டல்லரிஸ் நிறுவனங்கள்சார்பில் மேலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கோகுல், ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், கெளசிகா நீர்க்கரங்கள் செல்வராஜ்மற்றும் விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...