உடுமலை அருகே அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு - பாசன விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மோட்டார் வைத்து தொழிலதிபர்கள் திருடுவதால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயகட்டு பாசனத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதுபோக தென்னை, வாழை, கரும்பு பயிரிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று தாராபுரம் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் ஆயிரம் கன அடி வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.



இதற்கு இடையில் அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய நிலங்களுக்கு மோட்டார் வைத்து திருடுவதால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கூறி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் அமராவதி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுனர்.



பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொழிற்சாலை அதிபர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தண்ணீர் திருடும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டிப்பதாகவும், உடனடியாக அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக பதிக்கப்பட்டுள்ள பைப் லைன்கள், மின்மோட்டார்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தபட்டது.

இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அமராவதி புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு நாளை மறுநாள் அமராவதி அணையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...