கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலரவனுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி முன்னாள் மேயராக பதவி வகித்து வந்தவர் தா.மலரவன். இவர் 2001–2006 காலகட்டத்தில் கோவை மாநகராட்சி அ.தி.மு.க. மேயராக இருந்தார். 2006 முதல் 2016 வரை 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்த நிலையில் தா.மலரவன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று (17-05-2024) காலை 11 மணியளவில் கணபதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் இல்லத்திற்கு இன்று (மே.17) சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்தனை செய்தார்.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....