கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலரவனுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி முன்னாள் மேயராக பதவி வகித்து வந்தவர் தா.மலரவன். இவர் 2001–2006 காலகட்டத்தில் கோவை மாநகராட்சி அ.தி.மு.க. மேயராக இருந்தார். 2006 முதல் 2016 வரை 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்த நிலையில் தா.மலரவன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று (17-05-2024) காலை 11 மணியளவில் கணபதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் இல்லத்திற்கு இன்று (மே.17) சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்தனை செய்தார்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...