கோவையில் பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு

ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் உள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் மற்றும் முருகன் காலனியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் உள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (17.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத்தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.16க்குட்பட்ட முருகன் காலனியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, அவிநாசி மேம்பாலம் கீழ் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் உள்ள சுமார் 100 HP திறன் கொண்ட 2 எண்ணிக்கையிலான இராட்சத டீசல் மோட்டார்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர்கள் சந்தியா(மேற்கு), இளங்கோவன்(பொ) (தெற்கு), உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகரமைப்பு அலுவலர் காந்திமதி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், விமல்ராஜ், ராஜேஸ்வேணுகோபால், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்தின் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...