மங்களூரு - கோவை சிறப்பு ரயில் சேவையின் நேரம் மாற்றம்

மங்களூரு முதல் கோவை வரையிலான சிறப்பு ரயில் சேவையின் புறப்படும் மற்றும் வந்தடையும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.


Coimbatore: பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மங்களூரில் இருந்து மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 9.30 மணிக்குப் புறப்படும் மங்களூரு - கோவை சிறப்பு ரயில் (எண்: 06041) அன்று மாலை 6.15 மணிக்கு கோவையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த ரயிலானது, போத்தனூரை சென்றடையும் நேரமானது, மாலை 5 மணியில் இருந்து 4.50 ஆகவும், கோவை நிலையத்தை சென்றடையும் நேரமானது மாலை 6.15 மணியில் இருந்து மாலை 5.25 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...