மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி

தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதாக மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு, இன்று (மே.16) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர்.



பின்னர் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் E.உமர், மாநில பிரதிநிதிகள் A.சாதிக் அலி, A.K.சுல்தான் அமீர், கோவை மத்திய மாவட்ட தலைவர் A.சர்புதீன், மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் K.U.முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைத் தலைவர் நூர்தின், தமுமுக துணை செயலாளர்கள் அசாருதீன், பைசல் ரகுமான், மமக துணை செயலாளர்கள் S.S.அபு, ஆஷிக் அகமது, மருத்துவர் அணி செயலாளர் சபீர் அலி, பொருளாளர் ஜியாஉல்ஹக், மனித உரிமை அணி செயலாளர் சதாம் உசேன், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. தொண்டர்களுக்கும், தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...