மங்களூரு - கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையைத் தொடர்ந்து, மங்களூரு மற்றும் கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் மே 18 முதல் ஜூன் 29 வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Coimbatore:

சேலம் ரயில்வே கோட்டம், கோடை விடுமுறையை முன்னிட்டு மங்களூரு மற்றும் கோவை இடையே விசேஷ வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மே.15 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மங்களூரில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்றைய மாலை 6.15 மணிக்கு கோவையை சென்றடையும்.

மறுமார்க்கமாக, கோவையில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் காசார்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு மற்றும் போத்தனூர் போன்ற நிலையங்களில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...