உடுமலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

பாதிக்கப்பட்ட சிறுமைகளை விசாரித்து யாரேனும் தொடர்பு இருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும். இதுவரையிலும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உடுமலைப் பகுதிக்கு வந்து விசாரிக்கவில்லை என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணை செயலாளர் சுகந்தி புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்தது தொடர்பாக கடந்த 12-ம் தேதி மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.



அதைத் தொடர்ந்து இன்று அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம், ஜீவிகா அமைப்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.



அப்போது அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணை செயலாளர் சுகந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, உடுமலையில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

போதை வஸ்துக்கள் பள்ளி கல்லூரிகள் பகுதியில் விற்பனை செய்வதால் சிறார்கள், இளைஞர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் போதை வஸ்துக்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட உடுமலை தங்கும் விடுதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி சாட்சிகளை பலப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமைகளை விசாரித்து யாரேனும் தொடர்பு இருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும். இதுவரையிலும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உடுமலைப் பகுதிக்கு வந்து விசாரிக்கவில்லை.

அவர்கள் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டு காவல்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். வழக்கை ஆறு மாத காலத்திற்குள் விரைவாக விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் பிணையில் வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே அவர்கள் பிணையில் வராமல் காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் இது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதிகள், பள்ளிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குழந்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவர்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். பாலின சமத்துவம் குறித்த பாடத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் பவித்ரா, மாநில குழு உறுப்பினர் பானுமதி, மாதர் சங்க மாநில நிர்வாகிகள் கிரிஜா, இந்திரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் தாராபுரம் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...