உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் காவல் ஆய்வாளரை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

பாலியல் வழக்கு தொடர்பான தகவல் கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, தகவல் தர மறுத்து காவல்நிலையத்திற்குள் வரக்கூடாது, உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது வெளியே போங்க என்று கூறியதாக பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12-ம் தேதி 17 வயது சிறுமி தொடர்பான பாலியல் வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் சில இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, தகவல் தர மறுத்து காவல்நிலையத்திற்குள் வரக்கூடாது, உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது வெளியே போங்க என்று கூறியுள்ளார்.

காவல் ஆய்வாளரின் இந்த செயலை கண்டித்து உடுமலை அனைத்து பத்திரிகையாளர்களும் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை DSP சுகுமாரன், குடிமங்கலம் ஆய்வாளர் கீதா, பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை கொடுக்கவும், மரியாதையாக நடத்தவும் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். உடுமலை மகளிர் காவல் நிலையம் முன்பு பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...