வங்கி மேலாளர் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை துளசியம்மாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இவரும், இவரது மனைவியும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சுரபி அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் பணி நிமித்தமாக சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சிங்காநல்லூர் காவல் துறைக்கு வங்கி அதிகாரி ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்க்கு  வந்த காவல் துறையினர் வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அவர்கள் ஏதேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் 7 லட்ச ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...