உடுமலை அமராவதி அணையில் நீர்வரத்து பூஜ்ஜியம்; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணையில் நீர் வரத்து பூஜ்ஜியம் ஆன நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர், காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வந்தது.



இந்த நிலையில், தற்பொழுது போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் அணைக்கு கடந்த சில தினங்களாகவே நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி பூஜ்ஜியம் ஆனது. இதனால் அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாறைகள் தெரியும் அளவில் உள்ளது. தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில், தற்போது 39.40 அடியாக உள்ளது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...