ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாட்டம்

சர்வதேச செவிலியர் தின விழாவை முன்னிட்டு, செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து சேவையாற்றிய செவிலியர்களுக்கு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். G.மனோகரன் சாதனையாளர் விருது வழங்கினார்.


கோவை: மருத்துவ துறையின் முதுகெலும்பாக, அன்றாடும் தங்களது உழைப்பை ஈடுஇணையற்ற சேவையாக வழங்கி வரும் செவிலியர்களை பாராட்டி கௌரவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்த வருடம், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், சர்வதேச செவிலியர் தின விழா, மே 11 ஆம் தேதியான இன்று சிறப்பாக கொண்டப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து பணியாற்றி சேவையாற்றிய செவிலியர்களுக்கு, சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். G.மனோகரன் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்த ஆண்டின் செவிலியர் தின, ஆய்வுப்பொருளான, 'எங்கள் "செவிலியர்கள் எங்கள் எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி" என்பது பற்றி பேசிய டாக்டர் G.மனோகரன், மருத்துவத்துறையின் எதிர்காலம் செவிலியர்களை சிறப்பாக பயன்படுத்துவதில் தான் உள்ளது என்று குறிப்பிட்டார்.



இந்த ஆண்டின் விழாவையொட்டி, முன்னதாகவே, செவிலியர்கள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவமனையின் மருத்துவர்கள், நிர்வாகிகள் என அனைவரும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஊக்குவித்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...