அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி - கோவையில் முன்னாள் சர்வேயர் கைது

முருகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.77 லட்சம் வரை மோசடி செய்த நில அளவையர் கலைசங்கர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது தந்தை முருகன் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்த கலைசங்கர் (36) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

முருகன் தனது மகன் கார்த்திக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். இதையறிந்த கலைசங்கர் தனக்கு சென்னையில் அரசு பெண் உயர் அதிகாரி ஒருவர் நன்றாக தெரியும். எனவே அவரிடம் பேசி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது உண்மை என நம்பிய முருகன், தனது மகனுக்கு மற்றும் அவருக்கு தெரிந்த சிலருக்கும் வேலை வாங்கி தர கலை சங்கரிடம் கடந்த 2022-23 காலகட்டத்தில் ரூ.77 லட்சம் கொடுத்துள்ளார். முருகனிடம் அரசு முத்திரையுடன் கூடிய ஜுனியர் உதவியாளர் பணி உள்ளிட்ட பணிக்கான நியமன ஆணையை வழங்கியதாக தெரிகிறது.

ஆனால் அது போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் தன்னிடம் வாங்கிய ரூ.77 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதற்கு உடந்தையாக சாந்தி, கனகமணி உள்ளிட்டோர் இருந்து உள்ளனர். இதற்கிடையே முருகன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

எனவே அவரது மகன் கார்த்திக் இது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கலைசங்கர் (36) மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று (10-05-2024) அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...