அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி - கோவையில் முன்னாள் சர்வேயர் கைது

முருகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.77 லட்சம் வரை மோசடி செய்த நில அளவையர் கலைசங்கர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது தந்தை முருகன் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்த கலைசங்கர் (36) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

முருகன் தனது மகன் கார்த்திக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். இதையறிந்த கலைசங்கர் தனக்கு சென்னையில் அரசு பெண் உயர் அதிகாரி ஒருவர் நன்றாக தெரியும். எனவே அவரிடம் பேசி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது உண்மை என நம்பிய முருகன், தனது மகனுக்கு மற்றும் அவருக்கு தெரிந்த சிலருக்கும் வேலை வாங்கி தர கலை சங்கரிடம் கடந்த 2022-23 காலகட்டத்தில் ரூ.77 லட்சம் கொடுத்துள்ளார். முருகனிடம் அரசு முத்திரையுடன் கூடிய ஜுனியர் உதவியாளர் பணி உள்ளிட்ட பணிக்கான நியமன ஆணையை வழங்கியதாக தெரிகிறது.

ஆனால் அது போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் தன்னிடம் வாங்கிய ரூ.77 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதற்கு உடந்தையாக சாந்தி, கனகமணி உள்ளிட்டோர் இருந்து உள்ளனர். இதற்கிடையே முருகன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

எனவே அவரது மகன் கார்த்திக் இது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கலைசங்கர் (36) மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று (10-05-2024) அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...