அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி - கோவையில் முன்னாள் சர்வேயர் கைது

முருகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.77 லட்சம் வரை மோசடி செய்த நில அளவையர் கலைசங்கர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது தந்தை முருகன் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்த கலைசங்கர் (36) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

முருகன் தனது மகன் கார்த்திக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். இதையறிந்த கலைசங்கர் தனக்கு சென்னையில் அரசு பெண் உயர் அதிகாரி ஒருவர் நன்றாக தெரியும். எனவே அவரிடம் பேசி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது உண்மை என நம்பிய முருகன், தனது மகனுக்கு மற்றும் அவருக்கு தெரிந்த சிலருக்கும் வேலை வாங்கி தர கலை சங்கரிடம் கடந்த 2022-23 காலகட்டத்தில் ரூ.77 லட்சம் கொடுத்துள்ளார். முருகனிடம் அரசு முத்திரையுடன் கூடிய ஜுனியர் உதவியாளர் பணி உள்ளிட்ட பணிக்கான நியமன ஆணையை வழங்கியதாக தெரிகிறது.

ஆனால் அது போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் தன்னிடம் வாங்கிய ரூ.77 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதற்கு உடந்தையாக சாந்தி, கனகமணி உள்ளிட்டோர் இருந்து உள்ளனர். இதற்கிடையே முருகன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

எனவே அவரது மகன் கார்த்திக் இது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கலைசங்கர் (36) மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று (10-05-2024) அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...