கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென உடைந்து விழுந்த டைல்ஸ் கல் - இருவர் காயம்

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மீது திடீரென டைல்ஸ் கல் உடைந்து விழுந்ததில், ஒருவருக்கு தலையிலும், மற்றொருவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு டைல்ஸ் கல் பதிக்கும் பணி நடைபெற்றநிலையில் தற்போது உடைந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய பில்டிங் உள்ளது. இங்கு விமான நிலைய நிலம் கையகப்படுத்துதல் துறை இயங்கி வருகிறது. இங்கு சிங்காநல்லூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக இன்று (மே.10) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள, நில உரிமையாளர்களான செந்தில் குமார் மற்றும் தீபன் ரமேஷ் ஆகியோர் வந்தனர்.

கூட்டம் நிறைவு பெற்றதும் அங்குள்ள கை கழுவும் இடத்தில் இருவரும் கை கழுவ சென்றனர்.



அப்பொழுது சுவற்றில் பதிக்கபட்டு இருந்த டைல்ஸ் கல் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்து இருவரது மீதும் விழுந்தது. ஒருவருக்கு தலையிலும், மற்றொருவருக்கு கை பகுதியிலும் விழுந்ததில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது.



பின்னர் சத்தம் கேட்டு ஓடி வந்த அரசு அதிகாரிகள் சில நிமிடங்களில் எதுவும் நடக்காதது போல மீண்டும் தங்களது அறைக்கு திரும்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தோம். இங்கு டைல்ஸ் கல் உடைந்து காயம் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த டைல்ஸ் கல் பதிக்கும் பணிகளுக்கு டெண்டர் விட்டு, வட மாநிலத்தவர்கள் டைல்ஸ் ஒட்டும் பணி மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...