கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கு முதலுதவி செய்வது குறித்து பயிற்சி வகுப்பு

மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் வாரம் ஒரு முறை என நான்கு வாரங்கள் நடைபெற உள்ளது.



அதன்படி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று (மே.9) நடைபெற்ற முதலுதவி பயிற்சி முகாமில் ஆண், பெண் என சுமார் 180 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.



அந்த காவலர்களுக்கு தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது.



அண்மையில் மாநகர ஆயுதப்படையில் புதிதாக காவலர்கள் இணைந்துள்ளதால், அவர்கள் பயன் பெறும் வகையிலும், அவசர காலத்தில் எவ்வாறு விரைந்து முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...