கோவையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கோவையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இன்று ஆர்.ஜி.தெரு, தாமஸ் தெரு உள்ளிட்ட நான்கு பகுதிகளில் குட்கா பொருட்கள் அதிகளவில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குட்கா, பான்மசாலா அதிகளவில் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கோவையில் பிடிபட்டுள்ள சுமார் 2.5 டன் எடையுள்ள இந்த புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் பொள்ளாச்சி உள்ளிட்ட கோவை மாநகரத்தில் புறநகர் பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற புகையிலைப் பொருட்கள் கோவைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது. 

கடந்த காலங்களில் புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்களே தற்போதும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குற்றச் செயலில் ஈடுபட்டுவருவோரை தொடர்ந்து தேடி வருகிறோம். 



மேலும், பேருந்துகள் மூலம் புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தவிர்க்க வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள், ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களிடமும் இதுகுறித்து அறிவுரை வழங்கியுள்ளோம்" என தெரிவித்தார்

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...