கோவை மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி, குண்டத்தில் மல்லிகை மலர்ச் செண்டை வீசி குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். பின்னர், உதவி பூசாரிகள் குண்டம் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில் அருள்மிகு மாகாளியம்மன் திருக் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 23ஆம் தேதி கணபதி ஹோமம் பொரிச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜை, அக்னி கம்பம் நடுதல், பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல், குண்டம் திறத்தல், நகைப்பெட்டி எடுத்து வருதல், அக்னி வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இன்று (மே.8) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சியையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளிய வண்ணம் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது.



அதன் பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி கையில் வேல் எடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தார். குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி பயபக்தியுடன் அம்மனை மனதில் நினைத்து குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் சுரேஷ் கோலக் கூடை எடுத்தும், மனோஜ் சக்தி கரகம் எடுத்தும், சுதர்சன் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...