கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்ற தேனி போலீசார்

கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.


கோவை: யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனி போலீசார் நேற்று (07-05-2024) அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று (08-05-2024) காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.

ஏற்கனவே அவர் தேனியில் இருந்து கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வந்தபோது திருப்பூர் அருக விபத்தில் சிக்கினார். எனவே இந்த முறை விபத்தில் வேன் சிக்காத வகையில் பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு போலீஸ் வாகனம் சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்றது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...