மழை வர வேண்டி கோவை கோனியம்மன் கோவிலில் முட்டி போட்டு இந்து முன்னணி கட்சியினர் வழிபாடு

இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் தலைமையில் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் மழை வேண்டி இந்து முன்னணி கட்சியினர் முட்டி போட்டு வழிபாடு நடத்தினர்.


கோவை: கோவையில் கடும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சிறுவாணி அணை, பில்லூர் அணை, ஆழியார் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ் தலைமையில் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி கட்சியினர் முட்டி போட்டு வழிபாடு செய்தனர்.



மேலும் சதீஷ் கூறும்போது மழை இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இந்து முன்னணி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முட்டி போட்டு வழிபாடு செய்து மழை பெற வேண்டினோம் என தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...