கோவையில் காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது

கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்புகள் கோவை மாநகர் காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் இன்று துவங்கின. 6 நாட்களில் சுத்தம், தன்னம்பிக்கை போன்றவை கற்பிக்கப்படும்.


கோவை: கோவையில் மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவலர்களின் குழந்தைகளுக்கான 6 DAYS WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது.



இத்திட்டம் மே 8, 11, 13, 15, மற்றும் 17 ஆகிய நாட்களில் நடைபெறும். இந்த பயிற்சியில் காவலர் குடும்பத்தை சார்ந்த குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் 102 மாணவ/மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பில் SPIEGEL TRAINING AND FOUNDATION நிறுவனர் சத்தியமூர்த்தி சீரிய பயிற்சிகளை நடத்துகிறார். இப்பயிற்சிகளில் சுத்தம், தன்னம்பிக்கை, சுய மதிப்பு, சுய ஒழுக்கம், உணவு வழக்க வழக்கங்கள், மற்றும் தனித்திறமையை கண்டறிதல் ஆகியவை பயிற்சியாக வழங்கப்படுகின்றன.

இதுபற்றி பேசிய பாலகிருஷ்ணன் மாணவ/மாணவிகளை தங்களது ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்றும், தங்களது முடிவுகள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகர் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகரும் பங்கேற்றார்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...