உடுமலை அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தீர்த்த ஊற்றும் நிகழ்வும், கோட்டை மாரியம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: சித்திரை மாதம் என்றாலே திருவிழாக்களின் மாதம் என்று சொல்லுமளவுக்கு பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். கோடை வெயில் கொளுத்தும் காலத்தில் தெய்வங்களை மட்டுமல்லாமல் மண்ணையும், மனிதர்களையும் குளிர்விக்கும் சக்தி திருவிழாக்களுக்கு உண்டு. அந்தவகையில் உடுமலை அருகே பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது.



முதல் நிகழ்வாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நோன்பு கட்டப்பட்டு அன்றைய தினமே அமராவதி ஆற்றில் திருக்கம்பத்துக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு இரவு 11 மணியளவில் திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிலையில் இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தீர்த்த ஊற்றும் நிகழ்வும், கோட்டை மாரியம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாளை மே 7-ம் தேதி ஊர் பூவோடு எடுக்கும் நிகழ்வும், வரும் மே 8 ம் தேதி இரவு 9 மணியளவில் மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி வீதி வீதியாக பயணம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து சித்திரைத் திருவிழா கொண்டாடி வரும் நிலையில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...