குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு

குடிநீர் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: கோவையில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக குடிநீர் தட்டுபாட்டை போக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,



கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும், குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்தோம் எனத் தெரிவித்த அவர், குளங்கள், அணைகள் தூர் வாரப்பட்டதாகவும் தெரிவித்தார். நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டது, ஆனால் இப்போது நீர்மேலாண்மையே இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக பில்லூர், சிறுவாணி, அழியார் அணை ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரம். இந்த அணைகள் தூர்வாரி இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட அமைப்பதில்லை எனவும், இது போன்ற குடிநீர் பிரச்சினை வரும் போது லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகபட்சமாக 20 நாட்கள் வரை தண்ணீர் பல இடங்களில் வழங்கப்படுவதில்லை எனவும், அதேபோல் மாநகராட்சியில் முறையாக குப்பை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்க விடுவதில்லை எனத்தெரிவித்த அவர், அத்திகடவு அவினாசி திட்டத்தை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை எனவும், கோவை எஸ்ஐஎச்எஸ் பாலம் விரைத்து முடிக்க வேண்டும் என்றும், நடைபெற்று வரும் திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பொதுகழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும், போர்வெல் போட விண்ணப்பித்தால் அனுமதிக்கவேண்டும் என்றும், சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது, அவற்றை வேகமாக போட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.

தென்னை விவசாயிகள் லாரியில் தண்ணீர் வங்கி ஊற்றுகின்றனர். அதையும் அதிகாரிகள் தடுக்கின்றனர். பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் முழுமையாக இயங்குவதில்லை என்றும் குடிநீர் பிரச்சினை விரைவில் சரி செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...