குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு

குடிநீர் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: கோவையில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக குடிநீர் தட்டுபாட்டை போக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,



கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும், குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்தோம் எனத் தெரிவித்த அவர், குளங்கள், அணைகள் தூர் வாரப்பட்டதாகவும் தெரிவித்தார். நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டது, ஆனால் இப்போது நீர்மேலாண்மையே இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக பில்லூர், சிறுவாணி, அழியார் அணை ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரம். இந்த அணைகள் தூர்வாரி இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட அமைப்பதில்லை எனவும், இது போன்ற குடிநீர் பிரச்சினை வரும் போது லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகபட்சமாக 20 நாட்கள் வரை தண்ணீர் பல இடங்களில் வழங்கப்படுவதில்லை எனவும், அதேபோல் மாநகராட்சியில் முறையாக குப்பை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்க விடுவதில்லை எனத்தெரிவித்த அவர், அத்திகடவு அவினாசி திட்டத்தை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை எனவும், கோவை எஸ்ஐஎச்எஸ் பாலம் விரைத்து முடிக்க வேண்டும் என்றும், நடைபெற்று வரும் திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பொதுகழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும், போர்வெல் போட விண்ணப்பித்தால் அனுமதிக்கவேண்டும் என்றும், சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது, அவற்றை வேகமாக போட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.

தென்னை விவசாயிகள் லாரியில் தண்ணீர் வங்கி ஊற்றுகின்றனர். அதையும் அதிகாரிகள் தடுக்கின்றனர். பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் முழுமையாக இயங்குவதில்லை என்றும் குடிநீர் பிரச்சினை விரைவில் சரி செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...