இன்று கோவையில் 13 மையங்களில் நீட் தேர்வு: 6,967 பேர் தேர்வு எழுதவுள்ளனர்..!

கோவை மாவட்டத்தில்  13 மையங்களில், 371 அரசு பள்ளி மாணவ - மாணவிகள் உட்பட 6,967 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை (மூன்று மணி 20 நிமிடம்) வரை தேர்வானது நடைபெறும்.


கோவை: நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 2024 - 25 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை நடைபெற்றது. 

அதன் தொடர்ச்சியாக, நீட் நுழைவுத் தேர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கோவையில் 371 அரசு பள்ளி மாணவ - மாணவிகள் உட்பட 6,967 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி, சரவணம்பட்டி பப்ளிக் பள்ளி, புளியகுளம் ரோடு வித்யா நிகேதன் பள்ளி, புரூக் பீல்ட்ஸ் சிக்னல் கிக்கானிக் பள்ளி, சரவணம்பட்டி விவேகம் ,பள்ளி, காளப்பட்டி ரோடு சுகுணா பிப் பள்ளி, பட்டணம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி,கண்ணம்பாளையம் கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கல்லூரி, சூலூர் ரத்தினவேல் சுப்பிரமணியம் கல்லூரி, எஸ்.எஸ் குளம் ஆதித்யா கல்லூரி, காளப்பட்டி ரோடு என்.ஜி.பி பள்ளி,பொள்ளாச்சி ஏ.ஆர்.பி பள்ளி உள்பட 13 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகின்றது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வில், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 150 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறுகிறது. 

இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை (மூன்று மணி 20 நிமிடம்) வரை தேர்வானது நடைபெறும். 

நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும் மாணவர்கள் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வருகை தர வேண்டும். கடைசி நேரம் பதட்டங்களை தவிர்க்க மாணவர்கள் முன் கூட்டியே வீடுகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு புறப்பட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தி உள்ளது. 

மேலும், நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டு உள்ள ஹால் டிக்கெட் வழிகாட்டுதல்களை மாணவ - மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த தேர்வில் வழக்கம் போல் கடுமையான பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும். தேர்வர்கள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக் கூடாது, அதேபோல் ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...