சவுக்கு சங்கர் கைது: 14 நாள் நீதிமன்ற காவல் - கோவை நீதிமன்ற உத்தரவு

கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு நீதிபதி கோபாலகிருஷ்ணன் 14 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் அவரது காரில் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதற்காக கோவை சைபர் க்ரைம் போலீஸாரால்கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு, சவுக்கு சங்கர் கோவை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அங்கு கூடியிருந்த திமுக மாவட்ட மகளிர் அணியினர் சவுக்கு சங்கரை கண்டித்து கோஷங்களை எழுப்பி, காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டனர். 





கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது ஐபிசி பிரிவுகள் 294-பி (தகாத வார்த்தைகளில் பேசுதல்), 509 (பெண்களை அவதூறாகப் பேசுதல்), 353 (அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் கஞ்சா வழக்கும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





இந்த நிலையில், நேற்று சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது, நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து செல்வதற்காக வெளியே அழைத்து வந்த போது "ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்க சவுக்கு மீடியா தடையாக இருப்பதால் தான் மேலும் மேலும் பொய் வழக்குகள் போடுகிறார்கள்" என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...