செல்வபுரத்தில் கொலை செய்யும் திட்டத்துடன் சென்ற 4 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

வெங்கடேஷ் என்பவரின் தங்கையின் கணவரை கொலை செய்ய சென்று கொண்டிருந்த 4 பேரையும் செல்வபுரம் போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று மே.3 செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்த சதீஷ் (45) சொக்கம்புதூர் ரோடு, கிருஷ்ணா நகரை சேர்ந்த சசிகுமார் (34), சுண்டக்கா முத்தூர்சிவக்குமார் (34) பி. என்.புதூர், கோகுலம் காலனி வெங்கடேஷ் (52) என்பது தெரியவந்தது.

இவர்கள் வெங்கடேஷ் என்பவரின் தங்கையின் கணவரை கொலை செய்ய சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...