சிங்காநல்லூர் அருகே செல்போன் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து – போலீசார் விசாரணை

கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த செல்போன் கடை உரிமையாளரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் அங்குள்ள ராமானுஜம் நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் நேற்று (மே.2) கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்காநல்லூர் அருகே சென்றபோது எதிரே பைக்கில் வந்த 2 பேர் தினேசை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில், ஒருவர் கத்தியால் தினேசை குத்தினார். இதை பார்த்த சிலர் அங்கு ஓடி வந்தனர்.

இதைப்பார்த்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் கத்திக்குத்தில் காயமடைந்த தினேஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...