கடும் வெயிலால் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி பாதிப்பு – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஆனைமலை, வடக்கி பாளையம், பக்கோதிபாளையம் போன்ற பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


கோவை: தமிழகத்தின் தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியில் பிரதான விவசாயமான தென்னை சாகுபடி அதிக அளவில் விவசாயிகள் செய்துள்ளனர். ஆனால் அண்மை காலமாக கேரளா வேர் வாடல் நோய், பூச்சி தாக்குதல் போன்ற காரணங்கள் தென்னை விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விலை நிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீரும் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.



மேலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் ஆனைமலை, வடக்கி பாளையம், பக்கோதிபாளையம் போன்ற பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பச்சை பசேலனு காணப்பட்ட தென்னை மரங்கள் தற்போது கருகி எலும்பு கூடாக மாறியுள்ளது. இந்த காட்சியை கண்டு விவசாயிகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கத்தால் தென்னை மரங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...