கடும் வெயிலால் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி பாதிப்பு – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஆனைமலை, வடக்கி பாளையம், பக்கோதிபாளையம் போன்ற பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


கோவை: தமிழகத்தின் தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியில் பிரதான விவசாயமான தென்னை சாகுபடி அதிக அளவில் விவசாயிகள் செய்துள்ளனர். ஆனால் அண்மை காலமாக கேரளா வேர் வாடல் நோய், பூச்சி தாக்குதல் போன்ற காரணங்கள் தென்னை விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விலை நிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீரும் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.



மேலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் ஆனைமலை, வடக்கி பாளையம், பக்கோதிபாளையம் போன்ற பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பச்சை பசேலனு காணப்பட்ட தென்னை மரங்கள் தற்போது கருகி எலும்பு கூடாக மாறியுள்ளது. இந்த காட்சியை கண்டு விவசாயிகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கத்தால் தென்னை மரங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...