வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் ஆய்வு

பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐசியு வார்டுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா? என்று மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட இன இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு இறுதி நிலையில் உள்ள மருத்துவ புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐ சி யு வார்டுகளை முறையாக பராமரிக்கப்படுகின்றதா?.



நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா?. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா? மருந்துகளின் காலாவதி தேதிகள் மற்றும் அனைத்து வார்டுகளின் கழிவறைகள், தண்ணீர் வசதி கிடைக்கிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.



புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை உள்ளே நவீன சமையலறை மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, உணவு கூடம் மற்றும் அனைத்து அறைகளிலும் முழுமையாக சிகிச்சைக்கு வரும் சாமானிய மக்களுக்கு பயன்பாட்டுக்கு உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மருத்துவமனையில் காலை 8 மணி மற்றும் மதியம் 2 மணி மற்றும் இரவு 8 ஆகிய நேரங்களில் பணி மாற்றம் செய்து பணிக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வருகிறார்கள். இந்த சமயங்களில் பணியாளர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வரவில்லை என்று நோயாளிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால நோயாளிகள் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று ஆய்வில் தெரிவித்தார்.



புதிய வளாகத்தில் தேவையான உபகரணங்கள் மருத்துவர், செவிலியர், சமையலர், தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள் போன்றவர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

வால்பாறையில் இருக்கக்கூடிய பொதுமக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு இன்னும் சில நாட்களில் அனைத்து வசதிகளோடு புதிய மருத்துவமனை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாவட்ட இணை இயக்குனர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...