கோவையில் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: காவல்துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்

எஸ்.என்.எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புடன் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தினர்.



இன்று காலை கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த பேரணி பந்தயசாலை காவல் நிலையத்தில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தை அடைந்தது.



முன்னதாக மாணவர்களிடம் துணை ஆணையர் சரவணன் பேசுகையில், ‘கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் 34 மாணவர்கள் உயிரிழந்தனர். 

போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததாலே இந்த விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்க இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாணவர்களே விழிப்புணர்வு பேரணியை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

இந்த பேரணியில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார்,  காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...