பில்லூர் அணையை தூர்வார திட்டம் - மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் விளக்கம்

சிறுவாணி அணையை தூர்வாரும் அவசியம், தற்போதைக்கு இல்லை. பில்லூர் அணையை துார்வார திட்டமிட்டுள்ளோம். கடந்த வாரம்கூட, நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் பில்லுார் அணையை தூர்வாருவது தொடர்பாக கேட்டுள்ளனர். இது தொடர்பாக திட்ட அறிக்கை அளித்துள்ளோம் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: மழை இல்லாததால் நீர் மட்டம் வேகமாக சரிந்துவரும் நிலையில், பில்லூர் அணையை துார்வார நகராட்சி நிர்வாகத்திடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு உள்ளிட்டவை முக்கிய நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. தற்போது, மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. நேற்றைய நிலவரப்படி, 11.15 அடியாக நீர் மட்டம் இருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று முன்தினம், சிறுவாணி அணைப்பகுதிக்கு சென்று, கோவைக்கு கேரளா தரப்பில் இருந்து முறையாக தண்ணீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதுகுறித்து, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது, சிறுவாணியில் இருந்து தினமும், 3 கோடி லிட்டர் தண்ணீரை ஜூன் இரண்டாவது வாரம் வரை வழங்கும் வகையில் திட்டமிட்டு, கேரள அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

சிறுவாணி அணையை தூர்வாரும் அவசியம், தற்போதைக்கு இல்லை. பில்லுார் அணையை துார்வார திட்டமிட்டுள்ளோம். கடந்த வாரம்கூட, நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் பில்லூர் அணையை தூர்வாருவது தொடர்பாக கேட்டுள்ளனர். இது தொடர்பாக திட்ட அறிக்கை அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...