வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளி போராட்டம்

என் மீது எந்த தவறும் இல்லாதபட்சத்தில் எஸ்டேட் நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக கூறி நிரந்தர தொழிலாளியாக பணியாற்றும் வீரமணி என்பவர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பொழுது உடன் வேலை செய்த தனராஜ் என்பவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் வீரமணி என்பவருக்கு சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது.



சோக்காஸ் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து என் மீது எந்த தவறும் இல்லை. நிர்வாகம் ஒரு தரப்பாக செயல்பட்டு வருகிறதுஎன்று கூறி இன்று காலை ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள உயர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், தொழிலாளர் நலத்துறை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துசமரசம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை மின்சாரக் கோபுரத்தின் மேல் இருந்து இறக்கினர்.

இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...